இந்தியாவில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டம்!
இந்தியாவில் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்துவது குறித்து தீவரமாக பரிசீலித்து வருவதாக ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் ரகத்தில் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடலையும், ரெனோ டஸ்ட்டருக்கு இணையான புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலையும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அந்த நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்று, காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் ரீபேட்ஜ் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகும் காம்பெக்ட் எஸ்யூவியும், அதன் ரீபேட்ஜ் மாடலான ஸ்கோடா எஸ்யூவியும் அறிமுகம் செய்யப்படும்போது, உற்பத்தி செலவீனம் கணிசமாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.
இதுதவிர, 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட புதிய யெட்டி எஸ்யூவியையும் ஸ்கோடா அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








