புதிய 7 சீட்டர் பிரிமியம் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஸ்கோடா!
இந்தியாவில் புதிய 7 சீட்டர் பிரிமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்துவதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் மும்முரமாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் கிராஸ்புளூ கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையில் இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி போன்றே இந்த புதிய எஸ்யூவியின் கூரை பின்புறமாக தனிவாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.25 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த புதிய எஸ்யூவி அடுத்த ஆண்டு ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். இதுதவிர, ஃபோக்ஸ்வேகன் டைகுன் அடிப்படையிலான காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் திட்டமும் ஸ்கோடா ஆட்டோவிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய யெட்டி எஸ்யூவியை விட விலை குறைவானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








