2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை அறிமுகப்படுத்தும் சாங்யாங்
மஹிந்திராவின் அங்கமாகிவிட்ட பிறகு தென்கொரியாவின் சாங்யாங் நிறுவனத்தின் வர்த்தகம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மேலும், பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருந்து வருகிறது.
இதற்காக, 2 புதிய எஸ்யூவி கான்செப்ட்டுகளை அந்த நிறுவனம் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்த இருக்கிறது. சாங்யாங் XIV Air என்ற ஒரு மாடலும், சாங்யாங் XIV Adventure என்ற பெயரில் மற்றொரு மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இரண்டு எஸ்யூவி கான்செப்ட் மாடல்களும் விரைவில் தயாரிப்புக்கு செல்ல இருப்பதோடு, அடுத்த ஆண்டு விற்பனைக்கும் கொண்டு வரப்பட உள்ளதாக சாங்யாங் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த இரு மாடல்களிலும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் வகையில் இந்த எஞ்சின்கள் மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் சாங்யாங் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடல்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு வருவதற்கான சாத்திக்கூறுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








