அடுத்த 4 ஆண்டுகளில் 16,000 கோடியை அள்ளிக் கொட்ட டாடா தயார்
அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.16,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் ஆண்டுக் கூட்டம் மும்பையில் நடந்தது. அப்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி, உள்நாட்டு சந்தைக்காக அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.16,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

ஆண்டுக்கு ரூ.3,500 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தைக்கான புதிய வாகன வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, டீலர்ஷிப் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி குறைவாக இருந்தாலும், அதனை எதிர்கொண்டு மீண்டு வருவதற்கான முயற்சிகள் சரியான பாதையில் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக மிஸ்திரி குறிப்பிட்டார்.
உள்நாட்டு சந்தைக்கான புதிய வாகன வடிவமைப்பு, டீலர் கட்டமைப்பு விரிவுப்படுத்ததுல், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்கு இந்த முதலீடு பயன்படுத்த


Click it and Unblock the Notifications








