டாடா மோட்டார்ஸ் இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள்?!
டாடா மோட்டார்ஸ் இணையதளம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் செய்துள்ளதாக சந்தேககிக்கப்படுகிறது.
ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை இணையதள பக்கமாகும். கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா தயாரிப்புகள் குறித்த விபரங்கள் அந்த பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், அந்த பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். பாகிஸ்தான் ஹேக்ஸர்ஸ் க்ரூ என்ற பெயரிலான குழு அந்த பக்கத்தை முடக்கியுள்ளது. ஆனால், அது பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களா என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
"இந்தியாவே தயாராக இரு, நான் வந்து கொண்டிருக்கிறேன்", என்ற மிரட்டல் வாசகமும் முடக்கப்பட்ட இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








