சூப்பரான வேலை வேண்டுமா... டாக்சிஃபார் ஷ்யூர் வழங்கும் ஆஃபர்!
சிறந்த பணிபுரியும் சூழலுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பெங்களூரை சேர்ந்த டாக்சிஃபார் ஷ்யூர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'Most Awesome Job' என்ற பெயரில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை டாக்சிஃபார் ஷ்யூர் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தற்போது எந்த வேலையில் இருந்தாலும் பரவாயில்லை. புதிய பணி வாய்ப்புகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு மிகச்சிறந்த பணிச்சூழலில் பணிபுரியும் வாய்ப்பை வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் பற்றிய போதுமான அறிவு, ஆங்கில மொழிப்புலமை, தன்னம்பிக்கை கொண்ட இளைய சமுதாயத்தினருக்கு இது மிகச்சிறந்த பணி வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இதற்கான வேலைவாய்ப்பு பிரச்சாரங்களை டாக்சிஃபார் ஷ்யூர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த வேலைகளில் சேர விரும்புவோர் கீழ்கண்ட இணைய பக்கத்தில் சென்று கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
டாக்சிஃபார் ஷ்யூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு பக்கம்!


Click it and Unblock the Notifications








