புதிய தலைமுறை வால்வோ- ஐஷர் பஸ்கள் அறிமுகம்!
வால்வோ- ஐஷர் கூட்டணியின் புதிய தலைமுறை பஸ்கள் பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஐஷர் ஸ்கைலைன் புரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய பஸ் மாடல்கள் இலகு ரகத்தை சேர்ந்தவை.

இந்த புதிய பஸ் மாடல்கள் போக்குவரத்து செலவீனத்தை வெகுவாக குறைக்கும் என்று வால்வோ- ஐஷர் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஸ்கைலைன் புரோ பஸ் மாடல்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு மூன்று வித வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்களை அழைத்து வருவதற்கு ஏற்ற வகையிலும், சுற்றுலா பயன்பாட்டுக்கு ஏற்ற விதத்திலும் இவை கிடைக்கும்.
இவை 36 பயணிகள் முதல் 60 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் இருக்கை வசதி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் இ-483 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்தளம், ரேடியல் டயர்கள், பாரபோலிக் சஸ்பென்ஷன் மற்றும் சீட் பெல்ட்டுகள் உள்ளிட்ட பல புதிய சிறப்பம்சங்களை இந்த பஸ் மாடல்கள் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








