கோவையில் கார்ஸ்ஆன்ரெண்ட் நிறுவனத்தின் செல்ஃப் டிரைவிங் சேவை அறிமுகம்
கோயம்புத்தூரில், கார்ஸ்ஆன்ரெண்ட் நிறுவனத்தின் செல்ஃப் டிரைவிங் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடகை டாக்சி சேவையை அளித்து வரும் கார்ஸ்ஆன்ரெண்ட் நாட்டின் 21 நகரங்களில் தனது டாக்சி சேவையை வழங்கி வருகிறது.

மேலும், மைல்ஸ் என்ற பெயரில் சொந்தமாக வாடகைக்கு கார்களை எடுத்து ஓட்டும் சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையை தற்போது கோயம்புத்தூரில் துவங்கியிருக்கிறது கார்ஸ்ஆன்ரெண்ட் நிறுவனம்.
மணிக்கணக்கு, நாள் வாடகை, வார வாடகை மற்றும் மாத வாடகைக்கு கார்களை சொந்தமாக எடுத்து ஓட்டும் வசதியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
கோவையில் கார்ஸ்ஆன்ரெண்ட் நிறுவனத்திடம் ஏராளமானோர் இந்த சேவை குறித்து கேட்டு வந்ததால், இந்த வசதியை அறிமுகம் செய்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கார்கள், எஸ்யூவி வகை கார்கள் மற்றும் சொகுசு கார்களை மைல்ஸ் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் வாடகைக்கு பெற்று சொந்தமாக எடுத்து ஓட்ட முடியும்.
கோவையில் முதலில் டொயோட்டா எட்டியோஸ் கார்களை சொந்தமாக வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கார்களும் ஜிபிஎஸ் வசதி கொண்டது.


Click it and Unblock the Notifications








