ஏர்பேக்குடன் வந்த டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள்!
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் டாப் வேரியண்ட்டில் இப்போது ஏர்பேக் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
டட்சன் கோ காரின் புதிய டி ஆப்ஷனல் வேரியண்ட்டிலும், டட்சன் கோ ப்ளஸ் காரின் புதிய டி ஆப்ஷனல் வேரியண்ட்டிலும் இப்போது ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் வசதியுடன் கிடைக்கிறது.

இதன்மூலம், இரு மாடல்களின் விலையும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டட்சனின் தாய் நிறுவனமான நிசான் திட்டமிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், டட்சன் கோ கார் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றதுடன், அந்த காரின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு நிசான் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியது. இதனால், அந்த காரின் விற்பனை படு மோசமானது.
இந்த நிலையில், இரு கார்களிலும் இப்போது ஏர்பேக் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








