சென்னையில் கார் கஸ்டமைஸ் மையத்தை திறந்தது ஃபோர்டு!
சென்னையில், கார்களுக்கான முதல் கஸ்டமைஸ் செய்யும் மையத்தை ஃபோர்டு நிறுவனம் திறந்திருக்கிறது.
இந்த மையம் 35,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க, பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளை இந்த புதிய மையத்தில் பொருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலாவதாக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இங்கு கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்திக்கொள்ளளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிற ஃபோர்டு கார்களுக்கும் விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து வாங்க முடியும்.
மிகவும் சரியான விலையில், காரை அழகுப்படுத்தும் வாய்ப்பாகவும் இது இருக்கும் என்று ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஃபோர்டு நிறுவனமே கஸ்டமைஸ் செய்து கொடுப்பதால், வாரண்டி பிரச்னை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








