அடுத்த ஆண்டு இந்திய மாடல்களில் சிங்க்3 வசதி: ஃபோர்டு தகவல்
அடுத்த ஆண்டு இந்தியாவில் தனது லேட்டஸ்ட் சிங்க்3 தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை இந்திய கார் மாடல்களில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் சிங்க் தொழில்நுட்பத்தின் மூலம் வாய்மொழி கட்டளைகள் மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும். அவசர காலத்தில் தகவல் தொடர்பையும் வழங்குவதால் பாதுகாப்பு வசதியையும் அளிக்கிறது.

இந்தநிலையில், மேம்படுத்தப்பட்ட சிங்க் தொழில்நுட்பத்தை சிஇஎஸ் கண்காட்சியில் ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது. மிக எளிதாக இயக்குவதற்கான கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய சிங்க்3 வெர்ஷன் நுட்பத்தை அடுத்த ஆண்டு இந்திய கார்களில் வழங்க இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








