கன்னியாகுமரியில் புதிய செவர்லே கார் ஷோரூம் திறப்பு!
கன்னியாகுமரியில், ஏஆர்.ஏ.எஸ் என்ற பெயரில் செவர்லே கார்களுக்கான புதிய கார் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் செவர்லே கார்களுக்கான 20வது விற்பனை மையம் இதுவாகும்.இந்த புதிய கார் செவர்லே ஷோரூமில் கார் விற்பனை, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட 3S கார் ஷோரூமாக செயல்படும்.

கன்னியாகுமரியில் செவர்லே கார்களுக்கு இருக்கும் தேவையை கருத்தில்கொண்டும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை அளிக்கும் விதத்திலும் இந்த புதிய ஷோரூமை திறந்திருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் அர்விந்த் சக்சேனா தெரிவித்திருக்கிறார்.

பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை இந்த புதிய ஷோரூம் மூலம் வழங்க இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் தற்போது செவர்லே கார்களுக்காக 245 விற்பனை மையங்கள் மற்றும் 270 சர்வீஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








