ஏப்ரல் முதல் ஹோண்டா கார் விலை உயர்கிறது.
ஏப்ரல் முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, கலால் வரி உயர்வு போன்றவற்றின் காரணமாக கார் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலையை உயர்த்துவது என்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியிருக்கிறது.
விரைவில் இதற்கான விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா கார் நிறுவனத்தை தொடர்ந்து பிற கார் நிறுவனங்களும் ஏப்ரலில் விலையை உயர்த்தும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








