ஹூண்டாய் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நாளை நடக்கிறது.
நாடு முழுவதும் 536 இடங்களில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களில் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு பரிசோதனை முகாமில் 18 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சர்வீஸ் மையங்கள் தவிர்த்து, மக்கள் அதிகம் வரும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அருகாமையிலுள்ள ஹூண்டாய் ஷோரூம்களை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதுபோன்ற சிறப்பு பரிசோதனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மற்றும் நெருக்கமான தொடர்பையும், சேவையையும் வழங்க முடிகிறது என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications