Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இங்கிலாந்தில், ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆலைக்கு சென்ற நரேந்திர மோடி
இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் கார் ஆலைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன ஆலையை மோடி பார்வையிட்டார். இந்த உற்பத்தி ஆலை, இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
நரேந்திர மோடியுடன், டாடா குரூப் சேர்மேன் சைரஸ் மிஸ்திரி, ஜாகுவார் லேண்ட்ரோவர் சீஈஓ ரால்ஃப் ஸ்பெத் மற்றும் வார்விக் மேனுஃபேக்சரிங் குரூப்பின் லார்ட் குமார் பட்டாச்சார்யா ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம், ஒரு வருடத்திற்கு 4,25,000 கார்களை உற்பத்தி செய்கிறது. டாடா நிறுவனத்தின் வேறு எந்த உற்பத்தி ஆலைகளில் இருக்கும் பணியாளர்களை காட்டிலும், இந்த ஆலையில் அதிகமான பணியாளர்கள் பணி புரிகின்றனர்.
மேலும், டாடா குரூப்பால், இங்கிலாந்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு தான், வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும், மிக அதிகமான தொகையில் செய்யபட்டுள்ள மூதலீடு என்பது குறிப்பிடதக்கது.
நரேந்திர மோடி, இங்கிலாந்தில் மூன்று முழு நாட்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து உறையாடியுள்ளார்.
நரேந்திர மோடி, மேற்கொண்ட பயணத்தின் போது, அவரை ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் கார் மூலம் இந்த ஆலை சுற்றி காண்பிக்கபட்டது.
தற்போதைய நிலையில், ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் கார் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை. இந்த மாடல் தற்போது, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யபட்டுள்ளது.
ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இது ஆரம்ப கட்டதில், சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுமையாக தயாரித்து முடிக்கபட்ட காராக அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வரும் காலங்களில், இந்த ஜாகுவார் எக்ஸ்ஈ ஸ்போர்ட்ஸ் சலூன் காருக்கு எழும் தேவைகளை கருத்தில் கொண்டு இதனை இங்கேயே இந்தியாவில் தயாரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.