இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பிரிமியம் கார் ஷோரூம்களை திறக்கும் மாருதி!
இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பிரிமியம் கார் ஷோரூம்களை திறக்க இருப்பதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையை போக்கிக் கொள்ளும் விதத்தில், பிரிமியம் ரக கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது மாருதி.

இந்த புதிய கார் மாடல்களை பிரத்யேக ஷோரூம்களின் வாயிலாக முடிவு செய்தது. இதற்காக, நெக்ஸா என்ற பெயரில் புதிய கார் ஷோரூம்களை அந்த நிறுவனம் திறந்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 100 நெக்ஸா பிரிமியம் ஷோரூம்களை திறப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய ஷோரூம்களில் முதலாவதாக, சியாஸ் செடான் காரும், வரும் ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் ரக கார் மாடலும் விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








