அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா அக்கார்டு கார்!

அடுத்த ஆண்டு மத்தியில், புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போதைய மாடலைவிட புதிய மாடல் அளவில் சற்று சிறியதாக இருக்கும். அதேநேரத்தில், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Honda Accord

புதிய ஹோண்டா அக்கார்டு காரில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் வருகிறது. சிறிது காலம் கழித்து ஹைபிரிட் மாடலும் கொண்டு வரப்பட உள்ளது. டீசல் மாடல் பற்றி தகவல் இல்லை.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013ம் விற்பனையில் சோபிக்காததால், அக்கார்டு விற்பனையை இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தியது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Honda India now promise to launch their all-new Accord in the country during 2016. It is most likely to make its re-entry into the market at the 2016 Auto Expo in Delhi, which will be followed by its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X