Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டெல்லியில், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை!
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு பிரச்னையை கட்டுப்படுத்தும் விதத்தில், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில், வாகனப் பெருக்கத்தின் அளவு கட்டுக்கடங்காமல் செல்கிறது. டெல்லி மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் டெல்லிக்கு விஜயம் செய்கின்றன.
தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், டெல்லியில் வாகனங்களால் ஏற்படும் மாசு அளவு பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஸ்வந்தர் குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்த உத்தரவின் மூலம் டெல்லியில் 10 ஆண்டுகளை கடந்த 1,18,773 தனிநபர்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்ட டீசல் வாகனங்களும், 34,659 வர்த்தக வாகனங்களும் இயக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இதுதவிர, அண்டை மாநிலங்களிலிருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் டிரக்குகளும் இந்த தடை உத்தரவால் பாதிப்பை சந்திக்கும்.
மேலும், 2,500 அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் இந்த தடையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இந்த உத்தரவுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தடை உத்தரவால் 10 ஆண்டு பழைமையான டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
மேலும், டீசல் வாகனங்களுக்கான மதிப்பும் வெகுவாக அங்கு குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லியில் 15 ஆண்டு பழமையான அனைத்து வகை வாகனங்களுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. ஆனால், அந்த தடை இதுவரை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!