உலகச் சுற்றுச்சூழல் தினம்: கார்களுக்கு இலவச புகை பரிசோதனை முகாம்களுக்கு ஸ்கோடா ஏற்பாடு
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாளை கார்களுக்கான இலவச புகை பரிசோதனை முகாம்களை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இலவச புகை பரிசோதனை முகாம்களை இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்புடன் இணைந்து நடத்த உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து ஸ்கோடா டீலர்ஷிப்புகளிலும் இந்த இலவச புகை பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த இலவச புகை பரிசோதனை முகாமில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கப்படும் என்று ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








