வரும் 28ல் குஜராத்தில் சுஸிகி கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா!
வரும் 28ந் தேதி குஜராத்தில் அமைக்கப்பட இருக்கும் புதிய சுஸுகி கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் பங்கேற்க இருக்கிறார்.
குஜராத் மாநிலம், ஹன்சால்பூர் கிராமத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில், மாருதி கார்களை உற்பத்தி செய்வதற்காக பிரம்மாண்ட கார் ஆலையை சுஸுகி கார் நிறுவனம் அமைக்க இருக்கிறது.

சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த கார் ஆலையை சுஸுகி நிறுவனமே கட்ட இருக்கிறது. 2017ம் ஆண்டில் ஆலையின் கட்டுமானப் பணிகள் முடிந்து, கார் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கார் ஆலை மூலம் மாருதி கார்களின் காத்திருப்பு காலம் குறையும் என்பதோடு, ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் பெறும்.


Click it and Unblock the Notifications








