இந்தியாவில் கார்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: டொயோட்டாவின் புதிய கொள்கை
இந்தியாவில் கார் விற்பனையைவிட, கார்களில் பயணிகளின் பாதுகாப்பு வசதிகளுக்கு அதிக அக்கறை கொள்ளப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.
இதற்காக, தனது எதிர்கால வர்த்தக கொள்கைகளில் மாற்றங்களை செய்துகொண்டுள்ளது. கார்களில் ஏர்பேக் உள்ளிட்ட வசதிகளை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வரும் வேளையில், டொயோட்டா முன்கூட்டியே தனது கார்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

மேலும், இந்த புத்தாண்டு முதல் அனைத்து கார் மாடல்களிலும் ஏர்பேக்கை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கி வருவதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்களை போன்று விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் தீவிரம் காட்டுவதைவிட, கார்களின் பாதுகாப்பு விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








