டூ வீலர்களை இலவசமாக பழுதுபார்க்கும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்!
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கித் தரும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கின.

இதையடுத்து, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கித் தர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான இந்த சிறப்பு பழுது நீக்கும் முகாம்கள் நாளை முதல் வரும் 21ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு பழுது நீக்கும் முகாம்கள் நடைபெற இருக்கும் முகவரிகளையும், தொடர்புக்கான தொலைபேசி எண்களையும் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கீழே உள்ள இணைய இணைப்பில் சென்று விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள்!


Click it and Unblock the Notifications








