வாடகை கார் நிறுவனத்தில், 28 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஆடி
சில்வர்கார் என்ற வாடகை-கார் நிறுவனத்தில், 28 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆடி நிறுவனம், முதலீடு செய்ய உள்ளது.
ஃபோக்ஸ்வேனின் துணை நிறுவனமான ஆடி, சில்வர்கார் என்ற அடுத்த தலைமுறை கார் ரெண்டல் நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, அமெரிக்கா முழுவதும், வாடகை ஆடி கார்களை பரப்ப உள்ளனர்.

சில்வர்கார் என்பது மொபைல் அடிப்படையாக கொண்டு இயங்கும் துவக்கநிலை நிறுவனமாகும். 2012-ஆம் ஆண்டில் அறிமுகம் துவக்கபட்டுள்ள இந்த நிறுவனம், சில்வர் ஆடி மாடல்களை கொண்டுள்ளது.
ஒரு மேம்படுத்தபட்ட ஸ்மார்ட்ஃபோன் ஆப் மூலம், ரிசர்வேஷன் (பதிவு) மற்றும் கட்டண முறைகள் எளியதாக மாற்றபட்டதால், இந்த சில்வர்கார் ரெண்டல் பெரும் வெற்றி அடைந்தது. உதாரணமாக, ரெண்டல் காரின் விண்ட்ஷீல்ட் மீதுள்ள க்யூஆர் கோட் ஸ்கேன் செய்தால், அந்த ரெண்டல் கார் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பல மில்லியன் டாலர்கள் மூதலீட்டை தவிர்த்து, ஆடி ஆஃப் அமெரிக்காவின் உயர் அதிகாரியான் ஸ்காட் கியாக், சில்வர்கார் போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஒருவராக இணைகிறார். சிலவர்கார் நிறுவனம், கார் ரெண்டல் துறையின் வருங்காலம் மட்டுமல்ல, இது வருங்கால போக்குவரத்தின் முன்னோட்டாமாக விளங்க உள்ளது என ஸ்காட் கியாக் தெரிவித்தார்.
தனிநபர் போக்குவரத்தின் வழிமுறைகள் பரிணாமங்கள் அடைந்து கொண்டே இருப்பதால், சில்வர்கார் நிறுவனத்தில் ஆடி நிறுவனம் செய்துள்ள முதலீடும் விரிவடைந்து கொண்டே இருக்கும். மேலும், இந்த போக்குவரத்து முறைகளை பல்வேறு சந்தைகளிலும், அப்ளிகேஷன்கள் மற்றும் தயாரிப்புகள் உள்ளிட்ட பலவற்றில் ஆடி நிறுவனம் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








