தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து பகுதிகளை சரி செய்ய மத்திய அரசு முடிவு
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து பகுதிகளை (பிளாக் ஸ்பாட்கள்) சரி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு அரசு உத்தரவு வழங்கியுள்ளது.
தற்போது, சரி செய்ய தேர்வு செய்யபடும் முக்கிய சாலை விபத்து பகுதிகள், 2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் சேகரிக்கபட்ட இறப்பு தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யபடுகிறது. இப்படி 726 பகுதிகள் முக்கிய சாலை விபத்து பகுதிகளாக தேர்வு செய்யபட்டுள்ளது.
"முக்கிய சாலை விபத்து பகுதிகள் என்பது, அங்கு ஏற்படுகின்ற சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளின் அடிப்படையில் தேர்வு செய்யபடுகிறது. இந்த விபத்து பகுதிகளை சரி செய்யும் பணிகள், நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளின் பகுதியாக மேற்கொள்ளபடும்" என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன் தெரிவித்தார்.

"இந்த முக்கிய சாலை விபத்து பகுதிகளின் தேர்வு மற்றும் சரி செய்யும் பணிகள் குறித்து அமைச்சகம் வழிகாட்டு நெறிகளை வழங்கியுள்ளது" என பொன். ராதாகிருஷ்னன் தெரிவித்தார்.
இத்தகைய முக்கிய சாலை விபத்து பகுதிகள் பிரச்னைகளை சரி செய்ய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 11,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சாலை விபத்துகளின் காரணமாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 கோடி ரூபாய் முதல் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








