செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
செவர்லே இந்தியா நிறுவனம், தங்களின் செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் காரை இந்தியாவில், 2017-ல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
செவர்லே பீட் ஆக்டிவ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய திட்டம்;
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், பொதுமக்களின் கருத்துகளை ஏற்க துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய வாகன சந்தைகளில், செவர்லே ஸ்பின் எம்பிவியின் அறிமுகத்தை கைவிட்டுவிட்டது.
இதற்கு பதிலாக, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களின் செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் காரை அறிமுகம் செய்வதில் தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

செவர்லே பீட் ஆக்டிவ்;
செவர்லே நிறுவனம் வழங்கும் செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வாகனமாக அறிமுகம் செய்யபட்டது.
உண்மையில், செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர், மென்மையான ஆஃப்-ரோட் வாகனமாக உள்ளது. மென்மையான ஆஃப்-ரோட் வாகனங்கள் மக்களிடம் அதிக ஈர்ப்பை பெற்று வருவதையும் செவர்லே நிறுவனம் உணர்ந்து வருகிறது.
செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர், செவர்லே பீட் ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும்.

இஞ்ஜின்;
செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடலில், செவர்லே பீட் காரில் உபயோகிக்கப்படும் அதே இஞ்ஜின் தான் உபயோகிக்கப்படும்.
இந்த பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடலில், வேறு எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்;
செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடலை, பீட் ஹேட்ச்பேக்கில் இருந்து வேறுபடுத்தும் வகையில், பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவரின் எக்ஸ்டீரியர் அமைப்புகள் மற்றும் டிசைன் விஷங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

பிற அறிமுகங்கள்;
செவர்லே இந்தியா நிறுவனம், செவர்லே பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் மாடலை தவிர, இந்திய வாகன சந்தைகளில், எசென்சியா காம்பேக்ட் செடான் மற்றும் புதிய பீட் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்யும் முனைப்புடன் உள்ளது.
செவர்லே இந்தியா நிறுவனம், எஸ்யூவி செகம்ன்ட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளையும் மனதில் கொண்டு அதற்கு ஏற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி;
செவர்லே கார்களை தயாரித்து வழங்கும் ஜெனெரல் மோட்டர்ஸ் நிறுவனம், இந்தியா தான் தங்களின் உலகளாவிய உற்பத்தி மையமாக விளங்கும் என உறுதி செய்துள்ளது.

வருங்கால திட்டம்;
அடுத்த 24 மாதங்களுக்குள் குறைந்தது 5 புதிய மாடல்களாவது இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என ஜெனெரல் மோட்டர்ஸ் இந்தியாவின் பிரெசிடென்ட் மற்றும் மேனேஜிங் டைரக்டரான காஹெர் காசெம் தெரிவித்தார்.
புதிய பீட், புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர், எசென்சியா, புதிய செவர்லே க்ரூஸ் மற்றும் பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் தான் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த 5 மாடல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
பீட் தொடர்புடைய செய்திகள்
செவர்லே தொடர்புடைய செய்திகள்
ட்ரெயில்பிளேசர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்
செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்

செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்
செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்

செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்
செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்

செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்
செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்

செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்
செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்

செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்
செவர்லே பீட் ஆக்டிவ் - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








