புதிய தலைமுறை டீசல் இஞ்ஜின்கள் உருவாக்குவதற்கு டெய்ம்லர் நிறுவனம் 2.9 பில்லியன் டாலர் முதலீடு
புதிய டீசல் இஞ்ஜின்கள் உருவாக்குவதற்கு 2.9 பில்லியன் டாலர்களை செலவு செய்ய டெய்ம்லர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த டெய்ம்லர் நிறுவனம் தான், மெர்சிடிஸ் பென்ஸ்ஸின் தாய் நிறுவனம் ஆகும். டெய்ம்லர் நிறுவனம், புதிய தலைமுறை டீசல் இஞ்ஜின்களை உருவாக்கும் முனைப்பில் உள்ளது. இதற்கென, 2019-ஆம் ஆண்டிற்குள் 2.9 பில்லியன் டாலர்களை செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த 2.9 பில்லியன் டாலர்களில், ஒரு பகுதி தொகையானது, தற்போது பெரிய மெர்சிடிஸ் கார்களில் காணப்படும் செலக்டிவ் கேடலிட்டிக் ரிடக்ஷன் சிஸ்டம்ஸ் திட்டத்தில் முதலீடு செய்யபட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது சிறிய வகையிலான மெர்சிடிஸ் ஃப்ரண்ட்-வீல் டிரைவ் கார்களிலும் பொருத்தப்பட உள்ளது.

செலக்டிவ் கேடலிட்டிக் ரிடக்ஷன் சிஸ்டம்ஸ், தற்போது பயன்படுத்தபட்டு வரும், நைட்ரஸ் ஆக்ஸைட் டிராப் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம்ஸ்-களுக்கு மாற்றாக அமைய உள்ளது.
இத்தகைய பெரிய அளவிலான முதலீடுகளை, இஞ்ஜின் உருவாக்கம் மற்றும் உற்பத்தி திறன்கள் அகியவற்றிற்கு டெய்ம்லர் நிறுவனம் உபயோகிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








