Just In
- 1 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 28 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 45 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
டிராஃபிக் போலீஸ் காரை பார்த்தால் தானாக நிற்கும் கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்...!!
தானாக இயங்கும் செல்ஃப் டிரைவிங் கார் தொழில்நுட்பத்தை பல முன்னணி நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. அவற்றில் சில ஆட்டோ டிரைவ் ஆப்ஷன் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கும் வந்துள்ளன.
சாலையில் ஆட்டோ டிரைவிங் மோடில் கார்கள் செல்லும்போது, ஒரு சில விபத்துகள் நடப்பதுதான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. பொதுவாகவே, டிரைவர் இல்லாத தானியங்கி கார்களின் பாதுகாப்பு மீதான நம்பகத்தன்மை மீது எவருக்கும் பெரிய அபிப்ராயங்கள் இல்லை.
இந்த நிலையில், ஆங்காங்கே நடைபெறும் சில விபத்துகள் அத்தகைய சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்த்து விடுகின்றன. அதனைத் தவிர்க்கும் பொருட்டு அதி நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தானியங்கி கார்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த தலைமுறையினருக்கான டெக்னாலஜியில் அவை உருவாகின்றன. மென்பொருள் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளும் தற்போது அப்படியொரு காரை வடிவமைத்து வருகிறது.
ஆல்பாபெட் என்பது கூகுள் நிறுவனத்தின் தாய் கம்பெனி. எக்ஸ் என்ற பெயரில் அதன் கிளை நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவைதான் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் முக்கியப் பணிகள்.
அந்த நிறுவனம் தனது செல்ஃப் டிரைவிங் காரை தற்போது மேம்படுத்தி வருகிறது. பல முன்னணி கார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தனித்துவமான மென்பொருளில் அது வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
அதில் சிறப்பம்சமாக, டிராஃபிக் போலீஸார் சாலையில் நின்று கொண்டிருந்தாலோ, காரை வழிமறித்தாலோ அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வசதி கூகுள் செல்ஃப் டிரைவிங் டெக்னாலஜி காரில் உள்ளது.
சென்சார் வாயிலாக சாலையோரமாக உள்ள போலீஸாரை அடையாளம் காணும் டெக்னாலஜி இது. அதேபோல், அவசரமாக விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ், விஐபி பேட்ரோல் கார்களுக்கு வழி கொடுக்கும் வகையிலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சைரன்களில் ஒளிரும் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களை சென்சார் வாயிலாக அடையாளம் கண்டு, அதற்கு தக்கவாறு சமயோஜிதமாகச் செயல்படும் வழிமுறைதான் இது. மொத்தத்தில், பக்கா ஸ்மார்ட்டாகவும், பாதுகாப்புடனும் வரவிருக்கிறது கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்.
இந்திய சாலைகளில் அந்தக் கார்கள் பவனி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...