Just In
- 8 min ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 1 hr ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 2 hrs ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 2 hrs ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Movies Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மின்சார வாகனங்களுக்காக ரூ.500 கோடியில் சிறப்பு மானியத் திட்டம்!
மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை மதிப்பிலான சிறப்பு மானிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்களால் வெளியிடப்படும் நச்சுப் புகையால் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, பெரு நகரங்களில் காற்று மாசுபாடு அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. இதையடுத்து, மாற்று எரிசக்தி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பொது பட்ஜெட்டில், மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, சிறப்பு சலுகைத் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை மத்திய பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான FAME என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில், கூடுதலாக பெரும் நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்திருக்கிறார். இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இரு பிரிவாக செலவிடப்படும். மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அளிப்பதற்கு 50 சதவீதமும், மின்சார வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 50 சதவீத நிதியும் செலவிடப்படும்.
இந்த திட்டத்தின் மூலமாக, மின்சார வாகன விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 35,000 மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், அடுத்த நிதி ஆண்டில் ஒரு லட்சம் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு இலக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தால் மின்சார கார் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தின் பயனாக, இந்த ஆண்டில் புதிய மின்சார வாகனங்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா வெரிட்டோ கார் அறிமுகம் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!