ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கியது
ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கிவிட்டது.
இடி ஆட்டோ இதழ் வெளியிட்ட செய்தி படி, ஹோண்டா ஷோரூம்கள், அறிமுகத்திற்கு காத்திருக்கும் ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் புக்கிங்களை ஏற்க துவங்கியுள்ளன.
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, மே 5-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, ஹோண்டா மொபிலியோவை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட கார் ஆகும். ஹோண்டா மொபிலியோவோடு ஒப்பிடுகையில், ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி சற்று உயர்ந்த தோற்றம் கொண்டுள்ளது. ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 1 பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1 டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 117 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவியின் 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின், 98 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டுள்ளதால், இதில் 7 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வசதி கொண்ட மாடலாக விளங்குகிறது.
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, 8 லட்சம் ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபடலாம்.
இதர தொடர்புடைய செய்திகள்;
ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி, இந்தியாவில் மே 5-ல் அறிமுகம்?
ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்திற்கு முன்பாக டீஸர் வெளியீடு


Click it and Unblock the Notifications








