நாளை இந்தியாவில் ரிலீசாகிறது ஜீப் எஸ்யூவிகள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜீப் பிராண்டின் பிரிமியம் எஸ்யூவி மாடல்கள் நாளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ஜீப் செரோக்கீ, ஜீப் ரேங்லர் மற்றும் ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் பவர்ஃபுல் மாடலான செரோக்கீ எஸ்ஆர்டி ஆகிய மூன்று மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன.

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஜீப் எஸ்யூவியின் முதல் கார் ஷோரூம் நாளை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பரில் சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம்கள் திறக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஷோரூம்களை திறக்க ஜீப் பிராண்டின் தாய் நிறுவனமான ஃபியட் கிறைஸ்லர் குழுமம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை விற்பனை செய்வதற்கு ஃபியட் ஷோரூம்கள் தற்காலிகமாக துணைபுரியும். பின்னர், தனியாக ஷோரூம் அமைக்கப்பட உள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாளை ஜீப் எஸ்யூவி மாடல்களை ஜோத்பூரில் நடைபெற இருக்கும் மீடியா நிகழ்ச்சியில் டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறோம். ஜீப் எஸ்யூவி அறிமுகம் மற்றும் எஸ்யூவிகளின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








