Just In
- 5 min ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 3 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
Don't Miss!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பயோ- டீசலில் இயங்கும் ஸ்கானியா சொகுசு பஸ்கள்: கேஎஸ்ஆர்டிசி அறிமுகம்!
பயோ டீசலில் இயங்கும் ஸ்கானியா மல்டி ஆக்சில் பஸ்களை கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.
வாகனங்கள் வெளியிடும் புகையில் இருக்கும் நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு உமிழ்வை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், குறைவான மாசு உமிழ்வு தன்மை கொண்ட சொகுசு பஸ் மாடல்களை ஸ்கானியாக நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பஸ் மாடல்களை கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம்[KSRTC] பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக இந்த பயோ டீசலில் இயங்கும் சிறப்பம்சத்துடன் ஸ்கானியா நிறுவனத்தின் சொகுசு பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இந்த புதிய பஸ் மாடல்களை பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த பஸ்களின் சிறப்புகள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சாதாரண டீசலில் இயங்கும் பஸ்களைவிட பயோ டீசலில் இயங்கும் பஸ்களிலிருந்து வெளியேறும் மாசு உமிழ்வு 60 முதல் 70 சதவீதம் குறைவாக இருக்கும் என்பதே ஆகச் சிறந்த விஷயம். கனரக வாகனங்கள் வெளியிடும் புகையிலிருந்து வெளிப்படும் நச்சுப் பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளைவித்து வரும் நிலையில், இந்த பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் வந்துள்ளது.
மொத்தம் 25 பயோ டீசல் மல்டி ஆக்சில் பஸ்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இடையிலான நீண்ட தூர வழித்தடங்களில் இந்த பயோ டீசல் பஸ்கள் சேவைக்கு வந்துள்ளன.
இந்த பஸ்கள் பயோ டீசல் அல்லது டீசல் என இரண்டிலும் இயக்கும் சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. பயோ டீசல் இல்லாதபட்சத்தில் சாதாரண டீசலிலும் இயக்க முடியும். இந்த பஸ்களுக்கான பயோ டீசல் தெலங்கானா மாநிலத்திலிருந்து சப்ளை செய்யப்பட உள்ளது.
தற்போது பயோ டீசல் உற்பத்தி குறைவாக இருந்தாலும், அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதால், எதிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்தில் வாங்க திட்டமிடப்பட்டிருக்கும் அனைத்து டீசல் பஸ் மாடல்களிலும், பயோ டீசலில் இயங்கும் சிறப்பம்சத்துடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கான முன்மாதிரியான முயற்சியாக இருக்கும்.
ஏற்கனவே உள்ள டீசல் பஸ்களில் எந்த விதமான மாறுதல்களும் இல்லாமல், 20 சதவீதம் பயோ டீசலும் 80 சதவீதம் சாதாரண டீசலும் கலந்து இயக்குவதற்கும் திட்டமிட்டு இருப்பதாக கேஎஸ்ஆர்டிசி தெரிவித்துள்ளது.
பெங்களூர்- குந்தாப்பூர், பெங்களூர் - பீதர், பெங்களூர்- திருப்பதி மற்றும் பெங்களூர்- சென்னை ஆகிய வழித்தடங்களில் இந்த பயோ டீசல் பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பஸ்களுக்கான கட்டணத்தில் எந்தவித மாறுதல்கள் இல்லை. ஏற்கனவே, வசூலிக்கப்பட்ட அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..