Just In
- 38 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹரியானா கிராமத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்துத் தந்த மாருதி நிறுவனம்...
மண்ணாசையால் இதிகாசத்தில் மகாபாரதப் போர் நடந்தது. அதே காரணத்துக்காக கலிகாலத்திலும் இரண்டு உலகப் போர்கள் மூண்டு பல லட்சக்கணக்கானோர் மடிந்தனர். சரி... ஒரு வேளை மூன்றாம் உலகப் போர் மூண்டால், அது என்ன காரணத்துக்காக நடைபெறும் என்று கேட்டால் பெரும்பாலானோர் கூறும் பதில் நீருக்காக என்பதாகத்தான் இருக்கும்.
ஆம்... நீரின்றி அமையாது இவ்வுலகு என்று வள்ளுவன் கூறிய வாக்கு தடம் பிறழாமல் இன்று கண்கூடாக நடக்கிறது. ஒரு பக்கம் காட்டாற்று வெள்ளம் அடித்து நொறுக்கினாலும், மறுபக்கம் குடிக்க நீர் இல்லாமல் பல பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் வையத்தில் வாழ்பவர்க்கு எல்லாம் என்று கூறிய பாரதி, ஒருவேளை இன்று இருந்திருந்தால், வாய்க்கு நீர்தர வேண்டும் இந்த வையத்தில் உள்ளோர்க்கு எல்லாம் என்று கூட பாடியிருக்க வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு நிலை இன்று தண்ணீருக்கு... சரி விஷயத்துக்கு வருவோம். ஹரியாணா மாநிலம், மனேசர் பகுதியில் அமைந்துள்ள கசன் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம்.
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாட்டர் ஏடிஎம் எனப்படும் இந்த குடிநீ்ர் வழங்கும் மையத்தை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைத்துள்ளது மாருதி நிறுவனம். இதன் மூலம் 10,000 கிராமவாசிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்டர்லைஃப் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது மாருதி. வாட்டர் ஏடிஎம் அமைப்பதற்கான இடத்தை கசன் கிராம மக்கள் வழங்கியுள்ளனர். சுத்திகரிப்பதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மின் செலவை அந்த கிராம நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு 1,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறனுடன் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் மையத்தை அப்பகுதி எம்எல்ஏ பீம்லா சௌத்ரி, மாருதி விற்பனை பிரிவு இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தின் பராமரிப்புப் பணிகளை வாட்டர்லைஃப் இந்தியா நிறுவனம் 10 ஆண்டு காலத்துக்கு இலவசமாக மேற்கொள்ளும். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 35 பைசாவுக்கு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
வலிமையான இந்தியாவுக்கு தேவை சுகாதாரமான உள்கட்டமைப்பு. அதன் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கிராமங்களுக்கு வழங்க முயற்சி எடுத்த மாருதி நிறுவனத்துக்கு டிரைவ் ஸ்பார்க்கின் பாராட்டுகள்...
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!