மாருதி சுஸுகி நிறுவனம், 250 நெக்ஸா ஷோரூம்களை திறக்க திட்டம்
2017-ஆம் ஆண்டுக்குள், 250 நெக்ஸா ஷோரூம்களை நிறுவ மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் சில மாடல்களை விற்க, பிரத்யேகமாக நெக்ஸா ஷோரூம்களை நிறுவ துவங்கியது. கடந்த 6 மாதங்களில் மட்டும் நெக்ஸா மையங்கள் திறக்கபட்டுள்ளது.

நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம், கடந்த ஆகஸ்ட் 2015 முதல் தற்போது வரை மட்டும் 45,000 கார்கள் விற்று முடிக்கபட்டுள்ளது.
புதிய டர்போ-பெட்ரோல் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் கொண்ட, கான்செப்ட் இக்னிஸ் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ஆகிய கார்களை விரைவில் வெளியிட போவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

"தற்போதைய நிலையில், நெக்ஸா ஷோரூம்கள் மூலம் மாருதி சுஸுகியின் விற்பனை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு வாக்கில், இந்த விற்பனையின் சதவிகிதம் 15 சதவிகிதமாக உயர்ந்துவிடும்.
2020-ஆம் ஆண்டு காலகட்டதிற்குள் சுமார் 400 நெக்ஸா ஷோரூம்கள் இயங்கும் நிலை ஏற்படும்" என எம்எஸ்ஐஎல் (மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்) நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆர்எஸ் கல்ஸி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








