பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 பைசா என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 49 பைசா என்ற அளவிலும் குறைந்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் தற்போது தான், முதன் முறையாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இறங்குமுகத்தில் காணப்படுகிறது. இந்த விலை குறைப்பு, வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை, 4 முறைகள் செய்யப்பட்ட விலை மாற்றங்களில், ஒட்டுமொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.52 ரூபாய் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 4.52 ரூபாய் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.
எப்படியாகினும், தற்போது செய்யபட்டுள்ள விலை குறைப்பு, வரவேற்கக்கூடிய விஷயமாகும்.
இந்த விலை குறைப்பு பற்றி, ஐஓசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கருத்துகளை வெளியிட்டுள்ளது.
"சர்வதேச சந்தைகளில், தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் அடிப்படையிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் எக்ஸ்சேஞ் மதிப்பை பொருத்தும், இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








