பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் அதிகரிப்பு
பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் உயர்த்தபட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 2 வாரங்களுக்கு ஒரு முறை பரிசீலிக்கபட்டு அவற்றின் விலைகள் ஏற்றபடுகிறது அல்லது குறைக்கபடுகிறது.
தற்போது, தொடர்ந்து இரண்டாவது முறையாக இவற்றி விலைகள் உயர்த்தபட்டுள்ளது.
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.19 ரூபாயும், டீசலின் விலை லிட்டருக்கு 98 பைசா என்ற அளவிலும் உயர்த்தபட்டுள்ளது.
இந்த சமீபத்திய விலையேற்றங்களின் படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 61.87 ரூபாயாக உள்ளது. முன்னதாக, இதன் விலை லிட்டருக்கு 59.68 ரூபாயாக இருந்தது.

தற்போது, தலைநகர் டெல்லியில் டீசலின் விலை டீசலின் விலை லிட்டருக்கு 49.31 ரூபாயாக உள்ளது. முன்னதாக, இதன் விலை லிட்டருக்கு 48.33 ரூபாயாக இருந்தது.
இது குறித்து கருத்து கூறிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சர்வதேச அளவில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பொருத்தும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவும் இந்த விலை ஏற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது என தெரிவித்தது.


Click it and Unblock the Notifications








