Just In
- 22 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
80 சதவீத சாலை விபத்துகளுக்குக் காரணம் லஞ்சம்... அதிர்ச்சிகரமான உண்மை...!!
இந்தியாவில் மட்டும்தான் லஞ்சம், ஊழல் இருக்கிறதா? ஏன் வளர்ந்த நாடுகளில் எல்லாம் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் கடமையை மீறத்தான் லஞ்சம்... இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்..
இந்தியன் படத்தில் பலத்த கரவொலிகளைப் பெற்ற இந்த வசனத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், நாட்டின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. ஒரே ஒரு வளர்ச்சி என்னவென்றால், தேசத்தின் மூலை, முடுக்கெல்லாம் லஞ்சம் புரையோடிப் போயுள்ளது என்பதை மத்திய அரசே இப்போது ஒப்புக் கொண்டுள்ளது.
சாலை பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற பயிலரங்கம் ஒன்றில் பங்கேற்ற மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு விஷயத்தைக் கூறினார். அது, மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல். அதாவது, நாட்டில் நிகழும் 1.5 லட்சம் சாலை விபத்துகளில் பெரும்பாலானவைக்குக் காரணம் ஊழல்தான் என்று அவர் தெரிவித்தார்.
சுமார் 80 சதவீத விபத்துகள், திறன் இல்லாத ஓட்டுநர்களாலும், பழுதான வாகனங்களாலும்தான் நேர்கின்றன என்று கூறிய நிதின் கட்கரி, அவ்வாறு எந்த விதமான தகுதியற்ற நபர்களும், வாகனங்களும் சாலையில் அனுமதியுடன் செல்வதற்குப் பின்னால் லஞ்சம்தான் உள்ளது என்பதை பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார்.
ஆர்டிஓ அலுவலகங்கள்தான் லஞ்சத்தின் ஒட்டுமொத்த தலைமைச் செயலகம் என்பதை இந்த நாடே அறியும். அதன் அடிப்படையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவ்வாறு கூறியுள்ளார். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், போக்குவரத்துத் துறையில் வேரூன்றி இருக்கும் ஊழலை அடியோடு ஒழிப்போம் என்று அவர் வாக்குறுதி அளித்தது மட்டுமே. மேலும் ஆர்டிஓ அலுவலகங்களில் வாகன ஓட்டுநர் உரிமங்கள் வழங்கும் நடைமுறையில் 100 சதவீத வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தப் போவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
எது, எப்படியோ இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வராதா? என்றுதான் இந்த ஒட்டுமொத்த தேசமும் விரும்புகிறது. தகுதியில்லாவர்களுக்கு லைசென்ஸும், பழுதடைந்த வாகனங்களுக்கு பதிவு உரிமமும் வழங்குவது, கொடும் கொலைகாரர்களுக்கு அரசு அனுமதியுடன் துப்பாக்கி உரிமம் தருவதற்கு சமம். அதேபோல், லஞ்சத்தின் அவலத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசும் மக்கள், அதைத் தரக்கூடாது என்று முதலில் முடிவெடுக்க வேண்டும். அதன் பிறகுதான் அரசு நடவடிக்கைகள் எல்லாம் பலிக்கும்.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...