Just In
- 56 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மேலும் 3 கார்களில் குடை வைக்கும் இடவசதி: ஸ்கோடா அசத்தல்!
சர்வதேச அளவில் மாஸ் கார் நிறுவனமான ஸ்கோடா தயாரித்த மாடல்கள் எல்லாம் பார்க்க படு ஸ்மார்ட். அதன் காரணமாக வாடிக்கையாளகர்களின் குட் புக்கில் இந்த நிறுவனம் ஸ்ட்ராங்கான இடத்தைப் பிடித்துள்ளது.
அதையெல்லாம் தாண்டி செயல்பாடுகள் என எடுத்துக் கொண்டால், அதிலும் சமத்தான இடத்தையே பிடிக்கின்றன ஸ்கோடா கார்கள். அவ்வளவு ஏன்? அண்மையில் ஜேடி பவர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த பிரச்னைகள் கொண்ட காராகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய காராகவும் முதலிடத்தில் வலம் வந்தது ஸ்கோடாவின் தயாரிப்புகள்தான்.
அதுபோலவே காருக்குள் சில புதுமைகளைப் புகுத்தும் விஷயத்திலும் ஸ்கோடா கில்லாடி. காருக்குள் பக்கா பாதுகாப்பு அம்சங்களை மற்ற நிறுவனங்கள் வழங்கினால், அதைத் தாண்டி காரை விட்டு இறங்கும்போது மழை வந்தால் அதற்கு குடையும் தருகிறோம் என்று இன் - பில்ட் அம்பெர்லா ஆப்ஷனை ஸ்கோடா சூப்பர்ப் மாடலில் வழங்கி அசத்தியது அந்நிறுவனம்.
விஷயம் சின்னதுதான். ஆனால், அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதன் விளைவாக தற்போது ஸ்கோடாவின் அனைத்து மாடல்களிலும் குடை வைப்பதற்கான பிரத்யேக இடவசதியுடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சூப்பர்ப் மாடலில் உள்ளது போல் முன்பக்கக் கதவின் உள்ளே ஸ்மார்ட்டாகப் பொருத்தப்பட்ட குடைகளாக அவை இருக்காது. இருக்கைக்கு கீழேதான் பிற மாடல்களில் அந்த ஆப்ஷனை வழங்குகிறது ஸ்கோடா நிறுவனம். ஆக்டோவியா மாடலைப் பொருத்தவரை கூடுதலாக 25 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,100) கொடுத்தால் மட்டுமே குடை வழங்கப்படும்.
பிற ஸ்டேண்டர்டு மாடல்களில் அவை இன் - பில்ட் ஆப்ஷனாகவே வருகின்றன. அதேவேளையில் யேட்டி, ரேபிட் மாடல்களில் இந்த வசதியை ஸ்கோடா நிறுவனம் வழங்கவில்லை.
பாக்டீரியா தொற்று ஏற்படாத துணியில் செய்யப்பட்ட அந்தக் குடைகள், தண்ணீரை உடனே வடித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையிலும், வாடிக்கையாளர்களின் உணர்வுகளைத் தொடும் வகையிலும் இந்தத் திட்டத்தை வகுத்திருக்கிறது ஸ்கோடா.
ஆக மொத்தம் கார் (மழை) காலங்களில்கூட இனி ஸ்கோடா காரை நம்பிப் பயணம் மேற்கொள்ளலாம். ஏனென்றால் அந்நிறுவனம்தான் - கொடை - வள்ளலாயிற்றே...
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி