டெல்லியில் 2000 சிசி-க்கும் கூடுதலான டீசல் வாகனங்கள் மீதான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் பெரிய டீசல் கார்கள் மீதான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
முன்னதாக, 2000 சிசி-க்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு தடை விதிக்கபட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை நேற்று (31 மார்ச் அன்று) மீண்டும் நிகழ்ந்தது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான 3 நபர் ஸ்பெஷல் பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது. அப்போது, 2000 சிசி-க்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கு முன்பு விதிக்கபட்டிருந்த தடை நீட்டிக்கபட்டு உத்தரவு வழங்கபட்டது.
மேலும், 2000 சிசி-க்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்கள் மீதான தடை விலக்கி கொள்ளபட்டாலும், இத்தகைய டீசல் வாகனங்கள் மீது சுற்றுச்சூழல் செஸ் (என்விரான்மெண்டல் செஸ்) வரி விதிக்கபடும் என தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான 3 நபர் ஸ்பெஷல் பெஞ்ச் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், தற்போது டீசலை அடிப்படையாக கொண்டு இயங்கும் டேக்ஸிகள், சிஎன்ஜி-க்கு மாறிக்கொள்ள ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கபட்டுள்ளது. இந்த முடிவு, ஆப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓலா மற்றும் உபேர் ஆகிய கேப் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.
டெல்லி தான் உலக அளவில் மிக அதிகமான மாசு உமிழ்வு கொண்ட நகரமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








