டெல்லியில் இரவு 11 மணிக்கு பின்னரே டிரக்குகள் அனுமதிக்கபடும் நிலை ஏற்படும்

By Ravichandran

டெல்லியில் இரவு 11 மணிக்கு பின்னரே டிரக்குகள் அனுமதிக்கபடும் நிலை விரைவில் ஏற்பட உள்ளது.

டெல்லி அரசு, அதன் எல்லைக்குள் டிரக்குகள் அனுமதிக்கபடும் நேரத்தை 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக தாமதபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில், டிரக்குகள் இரவு 9 மணிக்கு மேல் தான் அனுமதிக்கபடுகிறது.

இதனை இரவு 9 மணிக்கு பதிலாக, மேலும் 2 மணி நேரங்கள் தாமதபடுத்தி 11 மணி முதல் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இது போன்ற திட்டங்கள், அதிகரித்து கொண்டே வரும் மாசு வெளிப்பாடுகளை கட்டுபடுத்தும் நோக்கிலேயே செயல்படுத்தப்படுகிறது.

trucks-allowed-inside-delhi-city-limits-after-night-11pm-only

இது தொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், டெல்லி அரசு உயர் அதிகாரி பின்வரும் தகவல்களை தெரிவித்தார்.

"போக்குவரத்து துறை, டிரக்குகள் அனுமதிக்கபடும் நேரத்தை தாமதபடுத்துவது தொடர்பான பரிந்துரை அரசுக்கு அனுப்பபட்டுள்ளது.

பின்னர், இது டெல்லி அரசிடம் இருந்து, டெல்லியின் துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங் அவர்களுக்கு அனுப்பபடும். இதன் பின்னர், இந்த பரிந்துரை நடைமுறைபடுத்தபடும்" என அந்த டெல்லி அரசின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Entry for Trucks inside Delhi are to allowed only after 11 P.M . A proposal is on to delay the entry of the Trucks inside the city at 11 p.m., instead of present permissable timing of 9 p.m . The Delhi government is proposing for this kind of delay of entry of trucks in the night in a bid to curb pollution levels.
Story first published: Saturday, January 2, 2016, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X