Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்தியாவில் ரூ.11,000 ஆரம்ப விலையில் ஹூண்டாய் எக்ஸெண்ட் காரின் முன்பதிவு தொடக்கம்
இந்திய சந்தையில் ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மேம்படுத்தப்பட்ட எக்ஸண்ட் காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட எக்ஸெண்ட் மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. முற்றிலும் புதிய வெர்ஷனில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரை முன்பதிவு செய்ய ரூ.11,000 ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸண்ட் காரை ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 மாடலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. காரின் புகைப்போக்கி குழாய், புகைப்படிந்த தோற்றத்தில் இருக்கும் எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் பகிலிலும் எரியக்கூடிய விளக்குகள் என பல புதுமையான வடிவமைப்புகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் காரின் பின் பகுதியில் இருக்கக்கூடிய விளக்குளும் புதுமையான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.
கிராண்ட் ஐ10 காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் எக்ஸ்ண்ட் காரிலும் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிவாயூகளிலும் இயங்கக்கூடிய வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் கொண்டு இயங்கும் எஞ்சின் 71 பி.எச்.பி பவர் மற்றும் டீசலில் இயங்கும் எஞ்சின் 75 பி.எச்.பி பவரை வழங்கும். மேலும் 1.1 லிட்டர் கொண்டு இயங்கும் எக்ஸ்ண்ட் டீசல் கார் எஞ்சினை 1.2 லிட்டர் திறனில் மாற்றியமைக்க முடிவில் ஹூண்டாய் உள்ளது.
எக்ஸண்ட் காரின் உள்கட்டமைப்பில் தொடுதிரை உடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு நேவிகேஷ்னுடன் உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் இணைத்துக்கொள்ளும் வசதி போன்றவையும் உள்ளன.
கார் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பு கருதி ரீவெர்ஸ் பார்க்கிங்கில் சென்சார் அமைப்புகள், மின்சார ஆற்றலால் செயல்படக்கூடிய ஆண்டி-லாக் பிரக்கிங் மற்றும் முன்பக்க கார்களுக்கான ஏர்பேகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
விரைவில் விற்பனைக்கு வெளிவரவுள்ள ஹூண்டாயின் எக்ஸண்ட் காருக்கு இந்தியாவில் ரூ.5.90 லட்சத்திலிருந்து, ரூ.8.70 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மார்கெட்டில் எக்ஸண்ட் மாடல் வரவேற்பை பெறும் பட்சத்தில் அது ஹோண்டாவின் அமேஸ், மாருதி சூசிகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் டிசைர் மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஏமியோ போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.