Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விறுவிறுப்பாக நடந்து வரும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா ராலி பந்தயம்!
மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலயமா ராலி பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பந்தயத்தின் முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிக சவாலான ராலி பந்தயங்களில் ஒன்றாக கருதப்படும் மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலாயா பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 19வது ஆண்டாக நடக்கும் இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது ஸ்டேஜ் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இந்த பந்தயத்தின் ஹைலைட்டான விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த 6 மற்றும் 7 தேதிகளில் மணாலியில் துவக்க நிகழ்வுகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, 7ந் தேதி இந்த பந்தயம் முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது. முதல் சுற்றில் மணாலி மற்றும் காஸா இடையிலான 203 கிமீ தூரம் நடந்தது. கிராம்பூ மற்றும் லோசர் வழியாக இந்த பந்தயம் நடந்தது.
இரண்டாவது சுற்றில் இதே வழித்தடத்தில் காஸாவிலிருந்து லோசர் மற்றும் கிாரம்பூவை வீரர்கள் தங்களது வாகனங்களில் கடந்தனர். பின்னர், பாங் என்ற இடத்தை அடைந்தனர்.
Recommended Video
மிக அபாயகரமான மலைச்சாலைகள் வழியாக இந்த பந்தயம் நடந்து வருகிறது. மிக மோசமான சாலை நிலைகளால் இந்த ஆண்டு பந்தயம் சற்று மெதுவாகவே நடந்து வருவதாக அங்கிருந்து தகவல்களையும், படங்களையும் வழங்கி வரும் எமது புகைப்பட நிபுணர் அபிஜீத் விளங்கில் தெரிவித்துள்ளார்.
மேலும், தொலை தொடர்பு மற்றும் இதர நடைமுறை சிக்கல்களால் உடனடியாக படங்கள், தகவல்களை பெறுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. இதனால், முதல் இரண்டு சுற்றுகள் பற்றிய விபரங்கள் அதிகம் இணையதளங்களில் வெளியாகவில்லை.
இந்த பந்தயத்தில் பல வீரர்கள் பந்தய தூரத்தை முழுமையாக கடக்கவில்லை. விபத்து மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பலர் விலகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
எக்ஸ்ட்ரீம் பைக் க்ளாஸ் பிரிவில் ஆர். நட்ராஜ், அப்துல் வாஹீத் தன்வீர் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். சுரேஷ் ராணா, ஹர்ப்ரீத் சிங் பாவா மற்றும் சஞ்சய் ரஸ்தன் ஆகியோர் எக்ஸ்ட்ரீம் கார்ஸ் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அடுத்து மீதமுள்ள 4 சுற்று பந்தயங்களும் வரும் 13ந் தேதி நிறைவடைகிறது. கடல் மட்டத்திலிருந்து 17,500 அடி உயரத்தில் இமய மலைச் சாலைகளில் மைனஸ் 15 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் வரும் நாட்களில் இந்த ராலி பந்தயம் நடைபெற இருப்பதால், வீரர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
இன்று மூன்றாவது சுற்று பாங் என்ற இடத்திலிருந்து தாத் வழியாக லே நகருக்கு செல்கிறது. லே பகுதியில் சிறப்பான தொலைதொடர்பு வசதிகள் இருக்கும் என்பதால், இந்த ராலி பந்தயம் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.
முக்கிய குறிப்பு: கடந்த ஆண்டு மாருதி சுஸுகி ரெய்டு டி ஹிமாலயமா ராலி பந்தயத்தின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு