Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 4 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பான்கார்டுக்கு பிறகு ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு திட்டம்..!!
பான்கார்டுக்கு பிறகு ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு திட்டம்..!!
ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் இதுகுறித்த சட்ட முன்வரவை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
தற்போது அமலில் உள்ள ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சட்டத்தில், ஒருவர் பல முறைகேடுகளை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஒருவர் பல பெயரில் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கக்கூடிய வாய்ப்பும் உருவாகிறது.
இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கான சட்டத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகள் பற்றி விவாதிக்க சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், டிஜிட்டல் வடிவலான செயல்பாடுகளுக்கு தான் ஆதார் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதாக கூறினார்.
ஆதாரால் ஒருவருக்கு பிரச்சனைகளை உருவாக்கும் நோக்கில் அதற்கான எந்தவித செயல்பாடுகளும் இருக்காது என மேலும் அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறினார்.
பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தின் மூலம் நாட்டில் நடைபெறும் பல பண மோசடிகள் தடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.
ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க, அவரது ஆதார் எண்னை கட்டாயம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு ஏற்கனவே மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் கிடைக்கபெற்ற அனைத்து தரவுகளையும் தேசிய தகவல் மையம் அதன் தரவுத்தளத்தில் பதிவேற்றும் செய்யும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளது.
இதில் இருக்கும் தகவல்கள் மூலம் எந்தவொரு மாவட்ட வருவாய் அலுவலர்களும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்களின் தகவல்களை பெற முடியும்.
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைபெறும் இதுபோன்ற முயற்சிகளில் மத்திய அரசு காட்டும் தீவிரம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான்.
ஆனால் ஆதார் என்ற ஒரு எண் மூலம் ஒரு தனிமனிதன் குறித்த எந்த தகவல்களும் முறைகேடாக சென்றுவிட அரசு அனுமதிகக்கூடாது என்பதே இதுதொடர்பான அரசின் செயல்பாடுகளில் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.