ஓட்டுனர்களின் தலை எழுத்து மாறுகிறது... டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!
டிரக்குகளில் ஏசி வசதியை கட்டாயமாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரக்குகளின் கேபினில் ஏசி வசதி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

நம் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்களில் டிரக்குகளால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. டிரக்குகளால் ஏற்படும் விபத்துக்களில் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு, டிரக் ஓட்டுனர்கள் சீக்கிரமாக அயர்ந்து போவதும் ஒரு காரணம் என்று ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டு இருக்கிறது. சீதோஷ்ண நிலையால் அவர்களது உடல் நிலை பாதிக்கப்படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சீதோஷ்ண நிலையால் ஓட்டுனர்களின் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, டிரக்குகளின் கேபினில் ஏசி வசதி இருப்பதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.
Recommended Video


கடந்த ஏப்ரல் 1ந் தேதியுடன் இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

3.5 டன் முதல் 12 டன் வரையிலான என்-2 வகை டிரக்குகளிலும், 12 டன்களுக்கு மேலான என்-3 வகை டிரக்குகளிலும் கேபினில் ஏசி வசதியுடன் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

நம் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளில் 11.4 சதவீதம் டிரக்குகளாலும், 7.4 சதவீதம் பஸ் போன்ற கனரக வாகனங்களாலும் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாக்கப்படுவதன் மூலமாக, ஓட்டுனர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








