Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Movies நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
”செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதனுக்கு அபாயமானது..” உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்
”செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதனுக்கு அபாயமானது..” உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்திற்கு ஆபத்து தான் உருவாகும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மாநில ஆளுநர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கிடம் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அரங்கத்தில் இருந்த ஒருவர், ரோபோக்கள் மனித செயல்களுக்கு மாற்றாக மாறுமா? என்று வேடிக்கையாக கேள்வி எழுப்பினார்.
எலான் மஸ்க், இதை மிகவும் சீரியஸாகவே எடுத்துக்கொண்டர், கேள்விக்கு பதிலளித்த போதும் அதில் பல நிகழ்கால உண்மைகளுடன் விளக்கினார்.
"ரோபோவை கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே தெரியவில்லை. எந்த நாட்டு அரசும் இதை கண்டுக்கொள்வதாக இல்லை. மனிதனை விட ரோபோக்கள் எல்லா வேலைகளையும் திருத்தமாக செய்யும். அதனாலே இது மனித இனத்திற்கு ஆபத்தானது தான்"
"இதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளில் அரசு தலையீட வேண்டும். ரோபோவிற்கான கட்டமைப்புகளை ஆராய்ந்து வலிமையான கட்டுபாடுகளை விதிக்கவேண்டும். அரசு தாமதிக்கும் ஓவ்வொரு நாளும் மனித இனத்திற்கு ஆபத்து தான்" என்று எலான் மஸ்க் தெரிவித்த பதில்கள் அரங்கத்தில் எச்சரிக்கை மணிகளாக ஒலித்தன.
செயற்கை நுண்ணறிவு திறனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து எலான் மஸ்க் பேசுவது இது இரண்டாவது முறை.
2015ல் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள் பலர் கில்லர் ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கடுமையாக எதிர்த்தார்.
மேலும், அதனால் மனித குலத்திற்க்கு அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். இது அன்றைய நாளில் பெரிய பரபரப்பை கிளப்பின.
இருப்பினும் "செயற்கை நுண்ணறிவு பெற்ற தொழில்நுட்பங்களை ரசிக்கும் நாம், அது ஏற்படுத்த இருக்கும் ஆபத்துகளை உணரும் போது, நிச்சயம் அதன் மேல் பயம் கொள்ள தொடங்கி இருப்போம்." என்று எலன் மஸ்க் நிகழ்ச்சியில் நிறைவாக பேசினார்
ஆட்டோமொபைல் உலகின் வருங்காலத்தின் முன்னோடி என்று பார்க்கப்படும் எலான் மஸ்க்கின் இந்த பேச்சு, உலகளவிலான தொழில்நுட்ப துறையில் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால போக்குவரத்தை மேம்படுத்த ஹைப்பர்லூப் போக்குவரத்துத் திட்டம், SpaceX, எலெக்ட்ரிக் கார்கள் போன்ற மாற்று தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகம் செய்ததில் எலான் மஸ்க் பெரிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!