வாசனை திரவியம் வெடித்ததால் உருகுலைந்த கார்... 20 வயது இளைஞர் படுகாயம்..!!
வாசனை திரவியம் வெடித்ததால் உருகுலைந்த கார்... 20 வயது இளைஞர் படுகாயம்..!!
ஏரோசோல் ஸ்பேரே என்பது மிகவும் ஆபத்தான தெளிப்பாக இருந்து வருவதாக அதை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முழுவதுமாக காலியான பாடில்களை கூட அதிக தீப்பிடிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் எறியவேண்டாம் என்பதும் இதில் முக்கிய எச்சரிக்கையாக உள்ளது.

இங்கே நீங்கள் படிக்கக்கூடிய சம்பவம் காரினுள் செயற்கை வாசத்தை பரவச்செய்யும் ஏரோசோலின் ஸ்பிரேவின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை உங்களுக்கு தரும்.

இங்கிலாந்தில் ஷ்ரூஸ்பெர்ரி பகுதியில் நின்றிருந்த கார் வெடித்ததில், அதில் சிகரெட்டை பற்றவைக்க முயன்ற 20வயது இளைஞர் ஜோய் என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

திடீரென கார் வெடித்ததற்கு காரணம், எரிவாயு குறைபாடோ, டயரோ அல்லது வெடிக்குண்டோ இல்லை. காருக்குள் பயன்படுத்தப்படும் வாசனை திரவியமான ஏரோசோல் ஸ்பிரவே காரணம்.

கார் வெடித்திருக்கும் விதத்தை பார்க்கும் போது இளைஞர் ஜோ எவ்வாறு உயிர் பிழைத்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

மேற்கூரை பிரிந்து, காரின் கட்டமைப்பு நெளிந்து, விண்ட்ஸ்கிரீன் முற்றிலும் சேதமடைந்து என இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 75 அடி தள்ளி போய் கார் விழுந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு யானை அந்த கார் மீது ஏறி சென்றால் காரின் கட்டமைப்பு எவ்வாறு சிதலமடைந்திருக்குமோ அந்தளவிற்கு கார் சிதைந்து காணப்படுகிறது.

அதனால் ஜோ உயிர் பிழைத்திருப்பது அதிசயம் தான். காரே உருகுலைந்து போனதற்கு காரணம் ஒரு வாசனை திரவியம் என்று தெரியும் போது தான் பெரிய ஆச்சர்யமே ஏற்படுகிறது.

காரை ஓட்டிக்கொண்டு இருந்தபோது, புகைப்பிடிக்க ஜோ லைட்டரை இயக்கியுள்ளார், அப்போது அதில் வந்த தீ, வாசனை திரவியத்தில் பரவி, அதனால் காரினுள் ஸ்பிரே வெடித்துள்ளது.

அதிகமான அழுத்தம் காரினுள் இருந்ததன் காரணமாகவும் இந்த வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்பதும் இதை குறித்து விசாரித்த போலீசாரின் கருத்தாக உள்ளது.

சுற்றுச்சூழலில் நிலவி இருந்த அழுத்தம், திடீரென வாசனை திரவியத்தில் தெளித்ததால் மாறி இருக்கும்.
அப்போது உடனே லைட்டரை இயக்கியது, மேலும் அந்த அழுத்தத்தில் அழுத்தம் உண்டாகி, தீ பரவி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை புரிந்துக்கொண்டாலும், காருக்குள் ஏற்பட்டுள்ள இந்த பலத்த சேதத்திற்கு மற்றொரு பொருளும் காரணமாக இருந்திருக்கிறது என போலீசார் சந்தேக்கின்றனர்.

அந்த பொருளும் வாசனை திரவியத்தில் அருகில் தான் இருந்ததாகவும் அவர்கள் எண்ணுகின்றனர். அதைக்குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








