இனி இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களுக்கு மட்டுமே அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு..!!
இனி இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களுக்கு மட்டுமே அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு..!!
இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தவறான நெறிகள் மற்றும் அதி விரைவாக வாகனங்களை ஓட்டுவதே விபத்துகள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

கடந்த 2016ல் மட்டும் இந்தியளவில் 1.51 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், சுமார் 74,000 பேர் இந்த சாலை விபத்துகளில் உயரிழந்துள்ளனர்.

தொடர்ந்து சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுக்க, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய முடிவை வெளியிட்டுள்ளது.
Recommended Video


அதன்படி, 2019 ஜூலை 1ம் தேதி முதல் ஏர்பேகுகள், சீட் பெல்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பயனாளிகளின் கார்களில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் 80 கி.மீ வேகத்திற்கு வாகனங்கள் சென்றால், பயண முறைகளை குறித்த வார்னிங் தரும் தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதாவது 80 கி.மீ வேகத்தில் ஒரு கார் செல்லும் போது, வேகத்தை காருக்குள் இருப்பவர்களுக்கு உணர்த்த வார்னிங் தரும் கருவி இருக்க வேண்டும்.

அந்தகருவியானது 100 கி.மீ மேல் கார் செல்லும் போது, மேலும் வார்னிங் ஒலியை அதிகரிக்கும். 120 கி.மீ மேல் சென்றால், மேலும் ஒலி அதிகரிக்கும்.

காரை பின்னே நகர்த்துவதற்கோ அல்லது நிறுத்தும் போதோ அதற்கு ஏற்றார் போன்று ஓட்டுநரின் தேவைக்காக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் பயன்படுகின்றன.

மேலும் விபத்துகளால் காரினுள் ஏற்படும் அதிர்வுகளால் பயணிகள் பாதிக்காமல் இருக்க, ஏர்பேகுகளும் இடம்பெற வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக்ம் கூறியுள்ளது.

முதல் முறையாக நகர்புறங்களிலும் சிறிய ரக வாகனங்களிலும் ஏர்பேகுகள், ரிவர்ஸ் சென்சார்கள் போன்ற கட்டமைப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








