மாசு உமிழ்வு மோசடி: ஆடி நிறுவனத்திற்கு பங்குதாரர்கள் புதிய நெருக்கடி
ஆடி நிறுவனம் அதன் பங்குதாரர்களிடமிருந்து புதிய நெருக்கடியை சந்தித்துள்ளது. அதுகுறித்த தகவல்களை இனி விரிவாக பார்க்கலாம்
மாசு உமிழ்வு மோசடியில் மேற்கொண்டு வரும் அனைத்து சீரமைப்பு பணிகளும் வெளிப்படத்தன்மையோடு இருக்கும் என ஆடி நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

மாசு உமிழ்வு மோசடியில் மேற்கொண்டு வரும் அனைத்து சீரமைப்பு பணிகளும் வெளிப்படத்தன்மையோடு இருக்கும் என ஆடி நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அமெரிக்க சுற்றுப்புறச் சூழலுக்கு புறம்பான வகையில் வோக்ஸ்வேகனின் வி6 3.0 லிட்டர் டீசல் மாடல் கார்களில் மாசு உமிழ்வு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வோக்ஸ்வேகன் கீழ் இயங்கும் ஆடி கார் தயாரிப்புகளும் இதனால் பாதிக்கப்பட்டன. மேலும் இதனுடைய விற்பனையும் அமெரிக்காவில் இறங்கு முகமானது.

இந்நிலையைல் மாசு உமிழ்வு மோசடியில் ஈடுபட்ட வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சுமார் 25 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க அரசு அபராதம் விதித்தது.

மேலும் மாசு உமிழ்வு செய்த கார்களை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும், அதற்காக வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அமெரிக்க ஆணையிட்டது.

இதற்காக சுமூக உடன்படிக்கையை வோக்ஸ்வேகன் அமெரிக்காவுடன் மேற்கொண்டு வரும் வேளையில், ஆடியின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஜெர்மனியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன், பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஆடி-யின் தலைமை அதிகாரி ரூபர்ட் ஸ்டார்ட்லெட் மாசு உமிழ்வு மோசடியில் ஆடி நிறுவனம் மேற்கொண்டு வரும் சீரமைப்பு பணிகள் வெளிப்படத்தன்மையோடு இருக்கும் என்றார்.

அதிகாரி ரூபர்ட் ஸ்டார்ட்லெட்டின் பேச்சில் திருப்தி அடையாத ஆடியின் பங்குதாரர்கள் மாசு உமிழ்வு மோசடியில் நடைபெற்ற அனைத்து ஊழலையையும் முழுவதுமாக ஆடி நிறுவனம் வெளியிட கேட்டுக்கொண்டனர்.

மேலும், இதற்காக அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் விசாரணையில் ஆடி நிறுவன அதிகாரிகள் யாரும் சரியான ஒத்துழைப்பு அளிப்பத்தில்லை என்றும் பங்குதாரர்களில் சிலர் குற்றம் சாட்டினர்.

இதற்கு பிறகு பேசிய தலைமை அதிகாரி ரூபர்ட் ஸ்டார்ட்லெர் மாசு உமிழ்வு மோசடி வழக்கின் அனைத்து விசாரணைக்கும் ஆடி நிறுவனம் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், அதில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என கூறினார்.

உலகின் ஆடம்பர கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆடி நிறுவனம் சீனாவில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 18% விற்பனையை இழந்துள்ளது.

வாகன விற்பனையின் மூலம் கடந்தாண்டில் 1.87 பில்லின் டாலர்களை சம்பாதித்த ஆடி, இந்நாண்டில் தற்போது வரையிலான விற்பனையில் 4% வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.

ஆடி நிறுவனத்தை நிர்வாகித்து வரும் வோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடியால் இழந்த பெயரை மீட்டெடுக்க தற்போது மின்சார வாகன துறையில் அதிக முதலீடு செய்து வருகிறது.
மின்சார ஆற்றல் மட்டுமின்றி, தானியங்கி கார்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்க முயற்சித்து அது முயற்சித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








