தானியங்கி பிரேக் அமைப்பு: வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உருவாகும் புதிய அழுத்தம்..!!
அமெரிக்காவில் தானியங்கி பிரேக் அமைப்பை கட்டாயமாக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
உலகின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 2021ம் ஆண்டிற்குள் தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தானியங்கி வாகன கட்டமைப்பில் மிகவும் தேவைப்படக்கூடிய ஒரு தொழில்நுட்பம் தானியங்கி பிரேக் அமைப்பு.

இந்த பிரேக் அமைப்பை தானியங்கி வாகன தயாரிப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்த வேண்டும் என்பது பல்வேறு சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.

அமெரிக்காவில் அரசியல் கட்சி தலைவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என பல தரப்பினர் தானியங்கி பிரேக் அமைப்பை, தானியங்கி வாகனங்களில் பொருத்த வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து மற்றும் அவசர காலங்களில் தானியங்கி பிரேக் அமைப்பால் பல்வேறு உயிரழப்புகள் தடுக்கப்படும் என்பதும் இவர்களது ஒட்டுமொத்த வாதமாக உள்ளது.

2018ம் ஆண்டில் நிஸான் மோட்டார்ஸ் விற்பனை செய்யும் அனைத்து பிரிவு வாகனங்களிலும் தானியங்கி பிரேக் அமைப்பு இருக்கும் என உறுதியளித்துள்ளது.

இதை தொடர்ந்து, இந்தாண்டில் இறுதிக்குள் டொயோட்டா அமெரிக்காவில் விற்பனை செய்யும் அனைத்து வித வாகனங்களிலும் தானியங்கி பிரேக் அமைப்பை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

தற்போதைய காலங்கில் தானியங்கி பிரேக் அமைப்புகள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகளில் தான் காண முடிகின்றன.
எதிர்பாராத விதமாக இந்த அமைப்பை பெற்ற அனைத்து ஐரோப்பிய தயாரிப்பு கார்களும் அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது.

ஆனால் இந்த அமைப்பு அமெரிக்காவின் அனைத்து கார்களிலும் இடம்பெற்றால், சாலை விபத்துகள் 20 சதவீத அளவில் குறையும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தானியங்கி பிரேக் அமைப்பு கொண்ட வாகனங்கள் இந்தியாவில் வந்தால் அமெரிக்காவை போன்று விபத்துகள் குறையுமா என்பது சந்தேகமே.
காரணம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உடனே தானியங்கி வாகன கட்டமைப்புகள் அறிமுகமானால், அதை உடனே நடைமுறைப்படுத்த முடியும்.

அதற்கு ஏற்றவாறான சாலை கட்டமைப்புகள் அந்த நாடுகளில் தற்போதே உள்ளது. அதனால் தானியங்கி வாகன நடைமுறைகள் அங்கு சாத்தியம்.
ஆனால் இந்தியாவில் நிலைமையே வேறு, முதலில் மின்சார வாகன தேவைகளுக்கு ஏற்றவாறு சாலை அமைப்புகள் உள்ளதா என்பதே சந்தேகம் தான்.

உலகளவில் தானியங்கி இயக்கம் பெற்ற வாகனங்கள் வெற்றி அடையுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. காரணம் அதிக விலைமதிப்பு.

தற்போதைய நடைமுறைக்கு தானியங்கி வாகனங்களில் மதிப்பு என்பது சாதரன வாகன பயன்பாட்டை விட கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது.

ஆனால் இனி வரப்போகும் கட்டமைப்புகளும், பயணங்களும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துமா என்பது கேள்விக்குறியே.
வாகன பயன்பாடு அவசியம் என்றால் சாலை விதிகளை சரியாக முறைப்படுத்த வேண்டும் அதற்கு நாமும் செலவழித்து தான் ஆகவேண்டும்.


Click it and Unblock the Notifications








