Just In
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெங்களூர் வழியாக மின்சார கார் பயன்பாட்டினை தென்னிந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி..!!
பெங்களூர் வழியாக மின்சார கார் பயன்பாட்டினை தென்னிந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி..!!
இந்தியாவில் மின்சார கார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு முதற்கட்டமாக கார்களுக்கான பேட்டரி சார்ஜிங் நிலையங்களை பெங்களூரில் அமைக்கறிது.
2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்சார ஆற்றலில் இயங்கும் கார்களுக்கே அனுமதி வழங்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
அதற்கான திட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் சோதனை முயற்சியாக கார்களுக்கான மின்சார ஆற்றலை வழங்கும் பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் 25 என்ற எண்ணிக்கையில் பெங்களூரில் அமைக்கப்படவுள்ளனது.
இதை FAME என்று சொல்லக்கூடிய மின்சாரம் மற்றும் ஹைஃபிர்ட் கார்களுக்கான அமைப்பு நிறுவ உள்ளது.
அரசின் கட்டுபாட்டில் இயங்கும் FAME மூலமாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அமைப்பு, மின்சார கார்களை உற்பத்தி செய்யும் மஹிந்தராவின் தனிப்பட்ட கிளையுடன் கூட்டணி அமைத்து சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் என மின்சாரம் நிலக்கரி மற்றும் புதிய ஆற்றல் துறைக்கான அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மஹிந்திராவின் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனம் பெங்களூரில் மொத்தம் 6 இடங்களில் மின்சார கார்களை சார்ஜ் செய்து கொள்ளும் நிலையங்களை நிறுவ உள்ளது.
ஃபேம் அமைப்பின் வழிமுறையை ஏற்று, இந்தியாவின் சில குறிப்பிட்ட நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக கனரக தொழில்துறையின் துறை மத்திய அமைச்சர்கள் ஆனந்த் கீத்தே மற்றும் பாபுல் சுப்ரீயோ தெரிவித்துள்ளனர்.
பெங்களூரை தவிர மற்ற நகரங்களில் கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்ட அமலாக்கம் மற்றும் ஒப்புதல் குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் ராஜஸ்தான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஜெய்பூர் மற்றும் சண்டிகர் நகரங்களில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
டெல்லியில் இதற்கான பணிகளை அமைக்க மஹிந்திரா ரெவா, ஆசிய எலெக்ட்ரிக், ஓலா மற்றும் லித்தியம் அர்பன் டெக்னாலிஜிஸ் போன்ற நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
ஃபேம் அமைப்புடன் இந்திய அரசு கைக்கோர்த்து முன்னெடுத்து செல்லும் சார்ஜிங் நிலையங்களால் மின்சார கார்களின் பயன்படுத்தும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்கும் என நாமும் எதிர்பார்க்கலாம்.