பிஎம்டபுள்யூ 1 சிரீஸ் ப்ரீமியர் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் இருந்து விடைபெற்றது..!!
பிஎம்டபுள்யூ 1 சிரீஸ் ப்ரீமியர் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் இருந்து விடைபெற்றது..!!
இந்தியாவிற்கான பிஎம்டபுள்யூவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அதன் 1 சிரீஸ் பீரிமியம் தர ஹேட்ச்பேக் காருக்கான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இந்தியாவில் எக்ஸ்1 எஸ்யூவி மாடல் இந்தியாவில் என்ட்ரி-லெவல் மாடல் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.

2017 ஜனவரி மாதம் முதலே 1 சிரீஸ் கார் நீக்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன.

பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் 1 சிரீஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் நிறுத்துவதாக பிஎம்டபுள்யூ அறிவித்தது.

பிசினஸ் லைன் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் உள்ள பிஎம்டபுள்யூ தொழிற்சாலையில் மொத்தம் எட்டு 1 சிரீஸ் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

2013ம் ஆண்டில் வெளியான பிஎம்டபுள்யூ 1 சிரீஸ் மாடல், மேம்படுத்தப்பட்ட வடிவில் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

118டி ஸ்போர்ட்லைன் டிர்ம் கொண்ட இந்த கார் வெள்ளை மற்றும் சிவப்பு என இருவேறு நிறங்களில் வருகிறது.
118டி ஸ்போர்ட்லைன் காரான இதில் 2.0 லிட்டர் திறன் பெற்ற ஃபோர்-சிலிண்டர் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சின் உள்ளது.

8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருதப்பட்டுள்ள இந்த கார் 148 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம் டாரக் திறன் கிடைக்கும்.

இந்தியாவில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட பிஎம்டபுள்யூ 1 சிரீஸ் கார் ரூ. 31 லட்சம் (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலைக்கு வாங்கப்பட்டது.

ப்ரீமியம் தர ஹேட்ச்பேக் கார்களின் பிஎம்டபுள்யூ 1 சிரீஸ் நல்ல திறம்பட்ட விற்பனையை வழங்கிய மாடல்.

ஆனால் ஒரே வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு உள்ளதால் இது தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெற தவறிவிட்டது.


Click it and Unblock the Notifications








